ஒரு வழியாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லேடி சூப்பர் ஸ்டார்!

ஒரு வழியாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லேடி சூப்பர் ஸ்டார்!
  • PublishedMarch 11, 2023

நடிகை நயன்தாரா, இயக்குனர விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து சமீபத்தில் திருமணம் முடித்துக்கொண்டார்கள்.

திருமணத்திற்கு பின் சில வாரங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதற்கு பல விமர்சனங்களை நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்ய நயன்தாரா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்தது.

அதுமாத்திரம் இல்லாமல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதன் விளைவாகத்தான் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவன் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறாக பல செய்திகள் இணையதளத்தல் உலாவந்தன.

இந்தநிலையில், இந்த சர்சை செய்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தனது பிள்ளைகளுடன் விமானநிலையத்திற்கு வந்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன், நயன் தாரா தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த மும்பையில் செட்டிலாகி குடும்பம் நடத்தி வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *