ஆபாச பட சர்ச்சை! கணவனை பிரிகின்றார் ஷில்பா ஷெட்டி

ஆபாச பட சர்ச்சை! கணவனை பிரிகின்றார் ஷில்பா ஷெட்டி
  • PublishedOctober 20, 2023

நடிகை ஷில்பா ஷெட்டியை பிரிவாதாக ராஜ் குந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. 1993ஆம் ஆண்டு வெளியான பாஸிகர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று ஷில்பா ஷெட்டிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பட வாய்ப்புகள் கிடைக்க அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு சரசரவென்று வளர்ந்து லீடிங் ஹீரோயின் ஆனார்.

ஹிந்தியில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவர் பிரபுதேவா ஹீரோவாக நடித்து கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

படம் ஹிட் இல்லையென்றாலும் பலராலும் ரசிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டியின் நடிப்பும் பிரபுதேவாவுக்கு போட்டியாக பாடல்களில் அவர் ஆடிய நடனமும் தமிழ்நாட்டு ரசிகரக்ள் கொண்டாடவேப்பட்டது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

திருமணத்துக்கு பின்பு நடிப்பை குறைத்துக்கொண்ட அவர் பிஸ்னெஸில் கவனம் செலுத்தினார்.

இந்த நேரத்தில்தான் கடந்த 2021ஆம் ஆண்டு ஆபாச படங்கள் விற்பனை செய்த வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த அவர் பிணையில் வெளியே வந்தார்.

சிறையிலிருந்து வெளியே வந்தாலும் ஷில்பாவுக்கும், குந்த்ராவுக்கு முன்னர் இருந்ததுபோல் திருமண வாழ்க்கை சுமூகமாக செல்லவில்லை என கூறப்படுகிறது.

ஏனெனில் ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டது ஷில்பாவை ரொம்பவே பாதித்துவிட்டதாகவும்; அந்த சமயத்திலேயே விவாகரத்து கேட்டதாகவும் பாலிவுட் வட்டாரம் தெரிவித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *