பிரபல சர்ச்சை நாயகியின் முகத்தை குதறியது யார்? அதிர்ச்சி பதிவு

பிரபல சர்ச்சை நாயகியின் முகத்தை குதறியது யார்? அதிர்ச்சி பதிவு
  • PublishedJune 3, 2024

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை நாடகங்களில் நடித்து வரும் நடிகை தான் உர்ஃபி ஜாவேத்.

யாராலும் அணியவே முடியாத அளவில் ஆடைகளை அணிந்து அதன் மூலம் ட்ரெண்டிங் ஆனா நாயகி தான உர்ஃபி ஜாவேத்.

கடந்த 2014வது ஆண்டு ஒளிபரப்பான ஒரு ஹிந்தி நாடகம் மூலம் தனது பயணத்தை தொடங்கிய உர்ஃபி ஜாவேத். இந்த ஆண்டு வெளியான ஒரு பாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதைத் தாண்டி கைக்கடிகாரம், பூக்கள், சங்கிலி, குண்டூசி போன்று கையில் கிடைக்கும் பொருள்களை எல்லாம் உடைகளாக மாற்றி அதை அணிந்து கொண்டு பொதுவெளியில் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதன் மூலம் பிரபலமானவர் தான் இவர்.

பல அரசியல் காட்சிகள் இவர் ஆபாசமாக ஆடை அணிவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாகவே இவருடைய முகத்தில் பல மாற்றங்கள் இருந்து வந்த நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு அது பெரும் வருத்தத்தை கொடுத்தது. சிலர் அவருடைய அதிக மேக்கப் தான் இதற்கு காரணம் என்று கூறி அவரை வறுத்தெடுத்து வந்தனர்.

இந்த சூழலில் அது குறித்து மனம் திறந்துள்ள உர்ஃபி ஜாவேத், தன்னுடைய முகம் குறித்து பலரும் பல விஷயங்களை பலர் பேசிவருவதாகவும். ஆனால் இது தனக்கு அவ்வப்போது இயல்பாக ஏற்படும் அலர்ஜிகள் தான் என்றும் கூறியுள்ளார். 18 வயது முதலிலேயே தனது முகத்தில் Botox மற்றும் பிற அழகு சாதன விஷயங்களை பயன்படுத்தி வரும் தனக்கு அப்பப்போது இது போன்ற முக வீக்கங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *