வாட்ஸ்அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்… நடிகை திடீர் தற்கொலை…

வாட்ஸ்அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்… நடிகை திடீர் தற்கொலை…
  • PublishedApril 29, 2024

பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது குடியிருப்பில் இருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஒரு ரகசிய குறிப்பைப் பகிர்ந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனஅழுத்தம் அவரது தற்கொலைக்குக் காரணமா? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நடிகை தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *