சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் – மின்னஞ்சலால் பரபரப்பு

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் – மின்னஞ்சலால் பரபரப்பு
  • PublishedMarch 22, 2023

பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரது மேலாளருக்கு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சல்மான் கானின் மேலாளர் பிரசாந்த் குஞ்சல்கர் பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை பிளாக்பக் என்ற மான்களை வேட்டையாடியது தொடர்பாக சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் தண்டனையும் பெற்று விட்டார்.

இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஸ்னாய் “சல்மான் கான் அந்த மானை வேட்டையாடி தங்களது இனத்திற்கு அவமரியாதை செய்துவிட்டார் என்பதால் அவர் மீதும் அவரது தந்தை சலீம் கான் மீதும் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கனடாவில் பதுங்கியிருக்கும் லாரன்ஸ் பிஸ்னாயின் நண்பர் கோல்டி பிரார் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது மேலாளர் பிரசாந்த் குஞ்சல்கரின் மின்னஞ்சலுக்கு இமெயில் செய்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

லாரன்ஸ் பிஸ்னாய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோர் பஞ்சாப் பாடகரானன சித்து மோஸ் வாலா கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் அவர். இவர்களின் மீது மும்பை போலீஸ் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சல்மான் கானின் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *