திரையரங்கிற்குள் பட்டாசு… பதறிப்போன சல்மான் கான்

திரையரங்கிற்குள் பட்டாசு… பதறிப்போன சல்மான் கான்
  • PublishedNovember 13, 2023

சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல்நாள் முதல்காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய சம்பவம் தொடர்பில் நடிகர் சல்மான் கான் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சல்மான் கான், கத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியான இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று (நவ.12) உலகம் முழுவதும் வெளியானது.

சல்மான் கான் ரசிகர்கள் பலரும் அதிகாலை முதலே பட்டாசு வெடித்து நடனமாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவின் மாலேகான் நகரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு உள்ளேயே பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சல்மான் கானின் அறிமுகக் காட்சியின் போது உற்சாக மிகுதியில் ராக்கெட் பட்டாசுகளை வெடித்தனர். அதே போல படத்தில் ஷாருக் கான் ஒரு கேமியோ ரோல் செய்துள்ளார். அவரது காட்சியின்போது ராக்கெட்டுகளை சரமாரியாக பறக்கவிட்டனர் ரசிகர்கள். இதனால் திரையரங்கம் முழுவதும் புகை மண்டலமானது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும் தியேட்டருக்குள் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த ரசிகர்களை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, “டைகர்-3 படத்தின் போது திரையரங்குகளுக்குள் பட்டாசு வெடிப்பதைப் பற்றி கேள்விப்படுகிறேன். இது ஆபத்தானது. நம்மையும் பிறரையும் பணயம் வைக்காமல் படத்தை ரசிப்போம். பத்திரமாக இருக்கவும்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *