Me too குறித்து மனம் திறந்த சாய்பல்லவி!

Me too குறித்து மனம் திறந்த சாய்பல்லவி!
  • PublishedMarch 13, 2023

Me too குறித்து சாய் பல்லவி தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
Me too  இயக்கம் ஒரு காலத்தில் சினிமா துறையை உலுக்கி எடுத்தது.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகைகள் போர்க்கொடி தூக்கியதும் ‘Me too இயக்கம் தொடங்கியது.

அதன்பிறகு நடிகர்கள், இயக்குனர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான நடிகைகள் பலர் வெளியே வந்து துணிச்சலாக மீ டூவில் புகார் தெரிவித்தார்கள்.

இந்தநிலையில் நடிகை சாய் பல்லவியிடம் Me too  குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இது கருத்து பேசியுள்ள அவர், பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமன்றி, வாய்மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.

பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் துஷ்பிரயோகம் ஆகும். அதுவும் மீ டூவில்தான் வரும் என்றார். சாய் பல்லவி இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *