பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியாத அளவுக்கு படத்தை எடுக்க உள்ளார் ராஜமவுலி

பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியாத அளவுக்கு படத்தை எடுக்க  உள்ளார் ராஜமவுலி
  • PublishedMay 11, 2023

பொன்னியின் செல்வன் 2 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் ராஜமவுலி மாஸ்டர் பிளான் ஒன்று போட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் வந்த சுவடே தெரியாத அளவுக்கு பிரம்மாண்ட படத்தை இறக்க இருக்கிறார். அதாவது மகாபாரதம் கதையை ராஜமவுலி படமாக எடுக்க இருக்கிறாராம்.

மகாபாரதம் பல தொலைக்காட்சிகளில் தொடராக ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ராஜமவுலி தனது கற்பனையில் மகாபாரத கதையை எடுக்க இருக்கிறாராம். ஆனாலும் கதையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கதாபாத்திரங்களை மட்டுமே மேம்படுத்த உள்ளதாக ராஜமவுலி கூறி இருக்கிறார்.

அதுமட்டும்இன்றி பொன்னியின் செல்வன் போல மகாபாரதம் மிகப்பெரிய கதை. ஒரே பாகத்தில் எடுத்து முடித்து விட முடியாது.

ஆகையால் ராஜமவுலி 10 பாகங்களாக மகாபாரத கதையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இப்போது மகாபாரத கதை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

மேலும் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்றால், புராண புத்தகங்களை படிக்க வேண்டி இருக்கும் என்பதால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தான் இதற்கான முழு வேளையில் ராஜமவுலி இறங்க இருக்கிறாராம். கதையை தயார் செய்த பிறகு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய உள்ளதாக அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *