இந்தியாவிலேயே யாருக்கும் கிடைக்காத பெறுமை ஷாருக்கானுக்கு கிடைத்தது

இந்தியாவிலேயே யாருக்கும் கிடைக்காத பெறுமை ஷாருக்கானுக்கு கிடைத்தது
  • PublishedJuly 24, 2024

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஹிந்தியையும் தாண்டி அவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கிங் படத்தில் நடிக்கவிருக்கும் ஷாருக்கானுக்கு ஒரு பெருமை கிடைத்திருக்கிறது.

ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது.

எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.

பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

இந்த படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

இப்படி கடந்த வருடம் வரிசையாக ஷாருக்கானுக்கு இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்துவிட்டன. இந்தச் சூழலில்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஷாருக்கான் நடிப்பில் மூன்றாவது படமாக டன்கி வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. மேலும் 470 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் உருவம் பதித்த நாணயத்தை பாரிஸில் இருக்கும் க்ரெவின் மியூஸியம் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்து முதன்முறையாக இந்த பெருமையை பெறுபவர் ஷாருக் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *