“Zee Tamil சரிகமப” இலங்கைச் சிறுமிக்கு சென்னை விமான நிலையத்தில் அமோக வரவேற்பு

“Zee Tamil சரிகமப” இலங்கைச் சிறுமிக்கு சென்னை விமான நிலையத்தில் அமோக வரவேற்பு
  • PublishedJuly 2, 2023

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளியின் மகள் ஆஷினி சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜீ தமிழின் “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று இந்தியா சென்றிருந்தார்.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை – நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த பின்னர் zee தமிழ் ஊடக குழுமத்தின் சார்பில் பிரதிநிதி வந்து அவரை அலைத்துச்சென்றார்.

இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான அசானியை சர்வதேசம்வரை கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள பாடசாலை அதிபர், பிரதி அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், ஊர் மக்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்து வெற்றிகரமாக வழியனுப்பிவைத்த மேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சண். குகவரதனுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலும், சென்னையில் திரையிறங்கிய பின்னரும் எடுக்கப்பட்ட படங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *