ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் மட்டும் தான் நடிப்பேன் : தயாரிப்பாளர்களை ஆட்டங்காணவைக்கும் நகைச்சுவை நடிகர்!

ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் மட்டும் தான் நடிப்பேன் : தயாரிப்பாளர்களை ஆட்டங்காணவைக்கும் நகைச்சுவை நடிகர்!
  • PublishedMarch 14, 2023

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் ஒரே ஒரு நகைச்சுவை நடிகர் யோகிபாபுதான். இதற்கு முன்னதாக சூரி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

இருப்பினும் தற்போது சூரியும் ஹீரோவாக நடிக்க களமிறங்கியுள்ளார். ஆகவே தற்போது இருக்கிற முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ஒருவர் யோகிபாபு மட்டும்தான். இதனால் தற்போது அவர் சம்பளத்தை உயர்தியுள்ளார்.

அதுமாத்திரம் இல்லாமல்  படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லையாம். படப்பிடிப்புக்கு லேட்டாக வருவது அதே போல் சீக்கிரமாக செல்வதுமாக இருந்து வருகிறார். ஒருநாள் மொத்தம் 4 மணி நேரம் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கு ஒரு நாளைக்கு மட்டும் சம்பளம் அதிகமாக வாங்கி வருகிறார்.

இதனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *