ஆசை இருக்கத்தான் வேணும்… ஆனால் பாலிவுட் ஸ்டாரின் வித்தியாசமான ஆசை என்னனு தெரியுமா?

ஆசை இருக்கத்தான் வேணும்… ஆனால் பாலிவுட் ஸ்டாரின் வித்தியாசமான ஆசை என்னனு தெரியுமா?
  • PublishedMarch 15, 2024

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், சினிமாவை விட்டு விலகிவிட்டு குன்னூரில் செட்டிலாக ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார்.

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாரஸ்ட் கோம்ப் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது.

இதில் நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி அடைந்தது.

லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுக்க முடிவெடுத்த அமீர்கான் அதன்பின் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை.

இதனிடையே அண்மையில் அவரது மகள் ஐராகானின் திருமணமும் நடைபெற்றது. அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் அமீர்கான் கடந்த சில மாதங்களாக சென்னையில் தான் வசித்து வந்தார். அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை எடுத்து வந்ததால் அவருக்காக சென்னையில் குடியேறினார் அமீர்கான். நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டில் தான் சில மாதங்கள் அமீர்கான் வசித்து வந்தார்.

நடிகர் அமீர்கானுக்கு சொந்தமாக மும்பையின் பந்த்ரா பகுதியில் பல கோடி மதிப்பில் சொகுசு பங்களா இருந்தாலும் அவருக்கு குன்னூரில் சொந்த வீடு வாங்கி குடியேற வேண்டும் என்பது கனவாக இருக்கிறதாம். இதுகுறித்து கடந்த 1994-ம் ஆண்டு அளித்த பேட்டியில் மனம் விட்டு பேசி இருக்கிறார் அமீர்கான்.

“நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டால் என்னுடைய மனைவி ரீனா தத்தா மிகவும் சந்தோஷப்படுவார். நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த அமீர் கான், குடும்பத்தினருடன் குன்னூருக்கு சென்று புது வாழ்க்கையை தொடங்குவேன் என கூறி இருக்கிறார். மேலும் அது வாழ்ந்த சிறந்த இடம் என கூறி உள்ள அமீர், தான் அங்கு சொந்தமாக வீடுவாங்குவது பற்றியும் யோசித்து வருகிறேன். அது என் நீண்டநாள் கனவு என்றும் தெரிவித்துள்ளார். மும்பையில் கோடி கோடியாய் சொத்து வைத்திருந்தும் நடிகர் அமீர்கான் குன்னூரில் குடியேற ஆசைப்படும் தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *