பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் நடிகை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் நடிகை!
  • PublishedMarch 13, 2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் கதைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

சமீபகாலமாக கதையில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், தற்போது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விறுவிறுப்பாக கதை நகர வழியமைத்துள்ளது.

இதற்கிடையே இந்த சீரியலை விட்டு விலகவுள்ளதாக பிரபல நடிகை அறிவித்துள்ளார். இதன்படி இந்த சீரியலில் இருந்த சாய் காயத்திரி வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பு நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தான் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பதிவு தான் அது. ‘இந்த சீரியலில் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரம் தனக்கு எதிர்காலத்தில் எந்த முன்னேற்றத்தையும் கொடுக்காது. எனவே விலகுகிறேன்’ என அதில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *