சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட வாரிசு நடிகர் : மனம் திறந்து பேசிய அப்பா இயக்குனர்

சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட வாரிசு நடிகர் : மனம் திறந்து பேசிய அப்பா இயக்குனர்
  • PublishedMarch 6, 2023

தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சில்க் ஸ்மித்தா. இவரது முகப் பாவனை, கவர்ச்சி, கொஞ்சி பேசும் வார்த்தை, நடிக்கும் அழகு என உச்சி முதல் பாதம் வரை சில்க் ஸ்மிதாவை ரசிக்காதவர்களே கிடையாது.
சில்க் ஸ்மிதா ஒரு படத்தில், ஒரு பாடலில் ஆடுகிறார் என்றால் இளசுகள் முதல் பெருசுகள் வரை திரையரங்குகளில் படையெடுப்பார்கள்.
இதன் காரணமாக இவருக்கு படங்களில் நடிக்கும் நடிகைகளை காட்டிலும் தயாரிப்பாளர்கள் சம்பளத்தை அள்ளிக்கொடுப்பார்கள். சில்க் ஸ்மிதாவை மனம் முடிக்க ஆசைப்பட்ட எத்தனையோ பிரபலங்களை சில்க் ஸ்மிதா அசால்டாக உதாசீனப்படுத்துவார்.
அதற்கு காரணமாக, தன் உடலுக்கு ஆசைப்படுபவர்களை காட்டிலும், மனதை புரிந்துகொள்பவர்களே சிறந்த மனிதர்கள் என சில்க் ஸ்மிதா நினைப்பாராம்.
இதன் காரணமாக சில்க் ஸ்மிதா யாரிடமும் பேசாமல் தனக்கான தனி குறுகிய வட்டாரத்தில் வாழ்ந்து வந்தவர். இதனால் இவரை திமிரு பிடித்த நடிகை என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்தன. அந்த வகையில் சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்ய வாரிசு நடிகரின் மகன் சிறு வயதிலேயே ஆசைப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சில்க் ஸ்மிதா இயக்குனர் வினு சக்ரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படத்தின் மூலமாக கவர்ச்சி நாயகியாக அறிமுகமானார். அனால் இவரது அடுத்த திரைப்படமான அலைகள் ஓய்வதில்லை படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் சில்க் ஸ்மிதாவின் நடிப்பை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான கங்கை அமரன், பிரபுவின் நடிப்பில் உருவான கோழிக் கூவுது படத்தில் சில்க் ஸ்மிதாவை கதாநாயகியாக்கினார்.
அப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்ற சமயத்தில், போனில் கங்கை அமரனை அழைத்து அவரது வீட்டுக்கு செல்வாராம் சில்க் ஸ்மிதா. கங்கை அமரனின் வீட்டுக்கு வந்து அவரது மனைவியுடன் இணைந்து சமையல் எல்லாம் செய்வாராம் சில்க் ஸ்மிதா.
அப்போது கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி, சிறு வயது பிள்ளையாக இருந்த போதிலும் ,சில்க் ஸ்மிதாவை வளர்ந்தவுடன் நான் தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறுவாராம்.
அந்த அளவிற்கு சில்க் ஸ்மிதா தன் குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்தவர் என கங்கை அமரன் கூறினார். மேலும் சில்க் ஸ்மிதா மருத்துவமனையில் அனாதை பிணமாக உள்ளார் என்ற செய்தியை கேட்டவுடன் தன்னால் வேதனை தாங்க முடியாமல் கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை காய்ச்சலில் இருந்ததாக கங்கை அமரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *