“எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது..” விரக்தியின் உச்சத்தில் ஷாலின் சோயா

“எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது..” விரக்தியின் உச்சத்தில் ஷாலின் சோயா
  • PublishedSeptember 2, 2024

சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வரும் டிடிஎப் வாசனின் காதலியான ஷாலின் சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

அண்மையில் இவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, எடவேல பாபுவுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்த நிலையில், தற்போது ஷாலின் சோயா விளக்கம் அளித்துள்ளார்.

பாலியல் வழக்கு குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறது.

அண்மையில் நடிகை மினு முனீர், கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு, செய்த அநாகரீக செயலைப் பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

இப்படி பாலியல் பிரச்சனை தலைவிரித்தாடிக்கொண்டு இருக்கும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஷாலின் சோயா எடவேல பாபுவுடன் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி, அவருடன் ஜோயா அட்ஜெஸ்ட்மென்ட் செய்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இதைப்பார்த்து, டென்ஷனான ஷாலின் சோயா, எதை சொல்வதாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேணாமா? என்ன நடந்தது தெரியுமா? அந்த வீடியோ பல வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது. இடைவேளையில் டிக் டாக் வீடியோவிற்காக செய்தது. அந்த பிரச்னைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

உண்மையில் இங்கு பெயர் தெரியாத கொடுமையான வில்லன்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன் என கோபத்துடன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறிய கமெண்ட்டில், இந்த கமெண்ட்டுகளை எல்லாம் பார்க்கும் போது எனக்கு தற்கொலை எண்ணம் தான் வருகிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நான் எந்த தவறுமே செய்யவில்லை என்றும் சோயா மனம் வருத்தி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *