மகளின் செயலால் அப்செட்டான ரஜினி.. இடத்தை காலி செய்துவிட்டாராம்…. மும்பையில் நடந்தது என்ன?

மகளின் செயலால் அப்செட்டான ரஜினி..  இடத்தை காலி செய்துவிட்டாராம்…. மும்பையில் நடந்தது என்ன?
  • PublishedMay 17, 2023

லால்சலாம் படப்பிடிப்பில் மெத்தனமாக இருக்கும் ஐஸ்வர்யாவால், ரஜினி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இதில் ரஜினிகாந்த், சுமார் 20 நிமிட காட்சியில் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் தொடங்கியது. மும்பையில் 2 வாரங்கள் ஷூட்டிங் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், 5 நாட்களிலேயே மும்பையில் இருந்து கிளம்பி சென்னை வந்துள்ளார் ரஜினி.

அவரை வைத்து 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், நான்காவது நாள் ஷூட்டிங்கில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் வராததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.

ஐந்தாவது நாளும் அதே காரணத்திற்காக படப்பிடிப்பு நடைபெறாததால், டென்ஷனான ரஜினிகாந்த் மகளின் மெத்தனப்போக்கை நினைத்து கோவத்துடன் சென்னை வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்தின் எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையில் செட் போட்டு படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ரஜினியின் கால்ஷீட்டுக்காக பலர் காத்திருக்கும் நிலையில், தன்னுடைய அப்பா என்பதால், ஐஸ்வர்யா ரஜினி, மெத்தனமாக இருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *