“என்னை அந்த இடத்தில் பிடித்தார்” பாலிவுட் நடிகை பரபரப்பு தகவல்

“என்னை அந்த இடத்தில் பிடித்தார்” பாலிவுட் நடிகை பரபரப்பு தகவல்
  • PublishedJune 13, 2023

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சாவரியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தனுஷுக்கு ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம்.

 

கடைசியாக இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜோயா பேக்டர் என்ற படம் வெளியாகியிருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூருக்கும் ஆனந்த் அஹுஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சிறுவயதில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சோனம் கபூர் கடந்த 2016 ஆம் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

அதில், எல்லோரும் சிறுவயதில் ஏதோ ஒருவகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. என்னை நிலை குலைய செய்தது.

மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அப்போது இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்காக சென்றபோது கூட்டநெரிசலில் ஒருவர் எனது மார்பகங்களை பிடித்தார். இதனால் அதிர்ச்சியானேன். என் கை, கால்கள் நடுங்கி அழ ஆரம்பித்தேன்.

பல வருடங்களாக இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் நானே தவறு செய்ததுபோல உணர்ந்தேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *