வெற்றி பட நாயகியை கைவிட்ட சுந்தர்.சி : சென்டிமன்ட்காக கெஸ்ட்ரோலில் கொடுத்த வாய்ப்பு!

வெற்றி பட நாயகியை கைவிட்ட சுந்தர்.சி : சென்டிமன்ட்காக கெஸ்ட்ரோலில் கொடுத்த வாய்ப்பு!
  • PublishedMarch 12, 2023

சுந்தர் சி படம் எப்பொழுதுமே பார்ப்பதற்கு ஆவலாகவும், ரசிக்கும்படி சுவாரசியமாகவும் படங்களை இயக்குவதில் கெட்டிக்காரரான இயக்குனர் என்று பெயரை எடுத்தவர்.

ஆனால் சமீபகாலமாக அவருடைய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை என்றே சொல்லவேண்டும்.

இவரின் கனவு படமான சங்கமித்ரா படத்தை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு ஒரு வழியாக படப்பிடிப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் சுந்தர் சி இயக்கிய படங்களில் கோவை சரளா முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

ஆனால் இந்த படத்தில் அவரை நடிக்கவில்லையாம். காரணம் அனைத்து படங்களிலும் கோவை சரளா இருந்தால் எல்லாம் ஒரே படம் போல தோன்றும் என்ற எண்ணத்தில் அவரை தவிர்த்திருக்கிறார்.

ஆனாலும் சுந்தர் சி மனதில், கோவை சரளா நடித்தால் அது வெற்றி பெறும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் அரண்மனை 3 இல் கோவை சரளா இல்லாததால் அவருக்கு பெரிய வெற்றி படமாக அமையவில்லை.

அதனால் அரண்மனை 4 இல் சென்டிமென்ட்காக கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு கெஸ்ட் ரோலில் மட்டும் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். இவரோட தேவைக்கு அவரை பகடைக்காயாக யூஸ் பண்ணுகிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *