உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள ‘பருந்தாகுது ஊர் குருவி’- அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ள ட்ரெய்லர்

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள ‘பருந்தாகுது ஊர் குருவி’- அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ள ட்ரெய்லர்
  • PublishedMarch 13, 2023

தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி உள்ள பருந்தாகுது ஊர்க்குருவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நிஷாந்த் ரூஷோ, காயத்திரி ஐயர், ராட்சசன் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படத்தில் வில்லனின் கூட்டாளியாக நடித்து தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார் விவேக் பிரசன்னா. அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து இறைவி, பீச்சாங்கை, விக்ரம் வேதா, மேயாத மான், சூரரைப் போற்று போன்ற படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார்.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக வந்த விவேக் பிரசன்னா ”நாம ஜெயிச்சிட்டோம் மாறா” என்று பேசிய வசனம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பெயர் எடுத்த விவேக் பிரசன்னா, பருந்தாகுது ஊர்க்குருவி என்ற படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில் கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், பொலிஸ் என மூவரால் தேடப்படும் ஒருவராக இருக்கிறார் விவேக் பிரசன்னா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *