ஜெய்லர் படத்திற்காக கேரளா சென்ற ரஜினி!

ஜெய்லர் படத்திற்காக கேரளா சென்ற ரஜினி!
  • PublishedMarch 23, 2023

நடிகர்  ரஜினிகாந்த்  தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலானது. அதில் இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும்,  ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.

மேலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளதாகவும் இதில் கலகலப்பான ரஜினியை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியானது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ரஜினி காந்த் கேரளா சென்றுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *