படையப்பா திரைப்படத்தின் முக்கிய காட்சியில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் : உண்மையை போட்டுடைத்த இயக்குனர்!

படையப்பா திரைப்படத்தின் முக்கிய காட்சியில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் : உண்மையை போட்டுடைத்த இயக்குனர்!
  • PublishedMarch 22, 2023

நடிகர் ரஜினி காந்த் நடித்த மாஸ் திரைப்படங்களில் முக்கியமானது பாட்ஷா, மற்றும் படையெப்பாதான்.  பாட்ஷா திரைப்படத்தின் வசூலை படையப்பா திரைப்படம் தான் முறியடித்தது.

இந்த படையப்பா திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினிக்கு மாஸ் காட்சிகள் இருக்கும். அப்படி ஒரு காட்சியில் நடிக்க மாட்டேன் என ரஜனி மறுத்தாராம்.

குறிப்பாக அவருடைய அப்பாவாக நடித்த சிவாஜி அவர்கள் சொத்துக்களை இழந்து மரணமடைந்த பிறகு வேறு ஒரு குடிலுக்கு போக வேண்டி இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் மறுபுறம் அவருடைய தங்கைக்கு ஏற்பாடு செய்த திருமணம் நிறுத்தப்பட்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கும் வகையில் கதை அமைந்திருக்கும்.

அப்பொழுது ஒரு சிறு காட்சியில் ரஜினி அழுகும்படி காட்சி அமைக்கப்பட்டிருக்கும் இந்த காட்சியில் நடிகர் ரஜினி காந்த் நடிக்க மாட்டேன் என சொல்லி மறுத்தாராம். மாஸ் ஹீரோவாக இருக்கும் நான் அழுதால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்  நன்றாக இருக்காது என்று சொல்லி ரஜினி நடிக்க மறுத்தாராம்.

ரஜினியை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் முடியாமல் சரி உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வருவது போலாவது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அந்த காட்சியை எடுத்தார்களாம். ஆனால் பட ரிலீசின் போது ரஜினி அழுத அந்த காட்சிக்கு ரசிகர்களிடையே பயங்கர ரெஸ்பான்ஸ் இருந்ததாக ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *