புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் புதிய அப்டேட்!
  • PublishedMarch 20, 2023

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’.

இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு  படக்குழு முனைப்புக் காட்டியது.

இதன்படி இந்த படத்தின் இரண்டாம் பாகம்  ‘புஷ்பா-தி ரூல்’ என்ற பெயரில் உருவாகிவருகிறது. படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகியது. இதேவேளை இந்த படத்தில் நடிகை சாய் பல்லவியும் இணைந்தள்ளார்.

இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும்,  அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *