மாடல் அழகி யாஷிகா ஆனந்தை கைதுசெய்யுமாறு உத்தரவு!

மாடல் அழகி யாஷிகா ஆனந்தை கைதுசெய்யுமாறு உத்தரவு!
  • PublishedMarch 24, 2023

மாடல் அழகி யாஷிகா ஆனந்த் சில வருடங்களுக்கு முன் ஈசிஆர் ரோட்டில் அதிவேகமாக காரில் சென்றதால் விபத்தில் சிக்கிஇ அவரது தோழி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரும் படுகாயம் அடைந்து பல மாதங்களாக மருத்துவமனையில் இருந்து எப்படியோ உயிர் பிழைத்து தப்பித்து விட்டார்

தற்போது யாஷிகா ஆனந்த் முழுவதுமாக குணமடைந்து சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் சில படங்களிலும் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதற்காக யாஷிகாவின் மீது பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு வந்திருக்கிறது. விசாரணையின் போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில்,  செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் வரும் 25ம் தேதிக்குள் யாஷிகா ஆனந்த் ஆஜராக வேண்டும்.  இல்லை என்றால் அவரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *