“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”.. விஜய் ஆண்டனி உருக்கம்

“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”.. விஜய் ஆண்டனி உருக்கம்
  • PublishedSeptember 21, 2023

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்த நிலையில் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் என் மகள் ஜாதி, மதம், பணம், வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு தான் சென்று இருக்கிறாள் என் மகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள். தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *