இலட்சக் கணக்கில் பண மோசடி செய்த ஏ.ஆர்.ரகுமான்? பரபரப்பு புகார்

இலட்சக் கணக்கில் பண மோசடி செய்த ஏ.ஆர்.ரகுமான்? பரபரப்பு புகார்
  • PublishedSeptember 27, 2023

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறைக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ஏ.ஆர்.ரகுமான் மோசடி செய்ததாக மற்றொரு புகார் எழுந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் இந்த புகாரை கொடுத்துள்ளனர்,

கொடுத்துள்ள இந்த புகார் மனுவில்…

“கடந்த 2018 ஆம் ஆண்டு, இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூபாய் 29.50 லட்சம் பணத்தை முன்பணமாக ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக்கொண்டார். பின்னர் மாநாடு நடத்த அனுமதி கிடைக்காததால், நிகழ்ச்சி நடைபெறவில்லை.

பின்னர் இதற்கான முன் தொகையை திரும்ப கேட்டபோது அதனை அவர் தரவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் 29 லட்சம் தங்களிடம் மோசடி செய்த ஏ. ஆர். ரகுமான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் கொடுத்துள்ள புகார் தற்போது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *