அரண்மனை 4 எத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கு தெரியுமா??

அரண்மனை 4 எத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கு தெரியுமா??
  • PublishedMay 6, 2024

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸான அரண்மனை 4 பாசிட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி, வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுவருகிறது.

இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். எதிர்பார்த்தபடியே இந்தப் படமும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதிலும் தமன்னாவின் நடிப்பு, கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துவருகின்றனர். மேலும் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கோலிவுட் ஹிட் படமாக இது அமைந்திருக்கிறது.

இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படம் வெளியான முதல் நாளில் 4.65 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 6.25 கோடி ரூபாயும் வசூல் செய்து முதல் இரண்டு நாட்களிலேயே 10 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இப்போது மூன்றாவது நாளான நேற்றைய வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரையரங்குகளில் கூட்டம் நல்லபடியாகவே இருந்தது. எனவே நேற்று மட்டும் இந்தப் படம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே படம் வெளியாகி மூன்று நாட்களில் மொத்தம் அந்தப் படம் 17 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியிருக்கிறது.

படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால் இனிவரும் நாட்களிலும் கூட்டம் அதிகரித்து வசூலில் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகமொத்தம் அரண்மனை 4 படத்தை சுந்தர்.சி பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்திருக்கிறார் என்று திரைத்துறையினர் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *