காட்டுன கவர்ச்சி பத்திக்கிச்சி…. கிடு கிடுவென உயர்ந்த சம்பளம்

காட்டுன கவர்ச்சி பத்திக்கிச்சி…. கிடு கிடுவென உயர்ந்த சம்பளம்
  • PublishedMay 10, 2024

பிரபல நடிகை அனுபாமா பரமேஸ்வரன் இப்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக அனுபமா தான் நடிக்கிறார்‌. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கார்த்திகேயா 2 படத்தில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான தில்லு ஸ்கொயர் படத்திலும் நடித்தார்.

இதில் மிகவும் கவர்ச்சியாக மற்றும் நெருக்கமான காட்சியில் அனுபாமா நடித்திருந்தார். இதனால் போஸ்டர் வெளியான போது மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. இதன் காரணமாக தில்லு ஸ்கொயர் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட அனுபாமா கலந்து கொள்ளவில்லை.

ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு அனுபாமாவின் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது.

தில்லி ஸ்கொயர் படத்திற்கு முன்னதாக ஒரு படத்திற்கு ஒரு கோடி மட்டும் சம்பளம் வாங்கி வந்தார்.

இப்போது சம்பளத்தை டபுள் ஆக்கி உள்ளார். அதாவது இரண்டு கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறாராம் அனுபாமா. இவருக்கு இருக்கும் மார்க்கெட்டால் தயாரிப்பாளர்களும் கேட்ட பணத்தை கொடுத்து அவரை புக் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *