செந்தில் – கவுண்டமணி காமெடி காட்சியில் வந்த அழகுமணி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

செந்தில் – கவுண்டமணி காமெடி காட்சியில் வந்த அழகுமணி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
  • PublishedMay 26, 2024

தமிழ் சினிமாவில் காமெடியை எடுத்துக்கொண்டால் செந்தில்-கவுண்டமணிக்கு முக்கிய பங்காளர்களாவர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்துமே அமர்க்களம் தான். நக்கல், நையாண்டி, குசும்பு, கலாட்டா, விழிப்புணர்வு என எல்லாம் கலந்த கலவையாக இவர்கள் இடம்பெறும் காட்சிகள் இருக்கும்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் கவுண்டமணி செந்தில் இருவரும் சக்கரவர்திகளாக வலம் வந்தனர்.

இன்று எவ்வளவோ காமெடி நடிகர்கள் வந்தபோதிலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களாக கவுண்டமணி செந்தில் திகழ்கின்றனர்.

கவுண்டமணி-செந்தில் இடம்பெற்ற மகுடம் படத்தில் ஒரு காமெடி காட்சி இடம்பெறும். கவுண்டமணியிடம் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை கொடுத்து இதுதான் என் தங்கை என்று கூறிவிடுவார் செந்தில்.

புகைப்படத்தில் இருப்பவரின் அழகில் மயங்கி கவுண்டமணி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள திருமணத்தின் போது தனது பக்கத்தில் மணப்பெண்ணாக இருப்பவரை பார்த்து ஷாக் ஆவார், அவர் தான் அழகுமணி.

இந்த காட்சியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த காமெடியில் அழகுமணியாக நடித்த அந்த நடிகையின் உண்மையான பெயர் அழகு மணி தானாம். ஆசிரியரான இவர் தற்போது வேலையை விட்டு, குடும்பத்தை கவனித்துக்கொண்டு இருக்கிறார்.

தற்போது, நடிகை அழகுமணியின் போட்டோ இணையத்தில் வெளியாகிஉள்ளது. அதில், அவர் செம ஸ்டைலாக, க்யூட்டாக இருக்கிறார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *