கூட்டத்தில் சிக்கிய ஹீரோயின்… கண்ட இடத்தில் கைவைத்த ரசிகர்கள்

கூட்டத்தில் சிக்கிய ஹீரோயின்… கண்ட இடத்தில் கைவைத்த ரசிகர்கள்
  • PublishedJune 3, 2024

பிரேமலு படத்தின் மூலம் மக்கள் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்டவர் தான் மமிதா பைஜு. இவர் சென்னை விஆர் மாலில் நடைபெற்ற கடை திறப்பு விழாவுக்கு வந்து கூட்டத்தில் சிக்கி பெரும் சிரமத்தை சந்தித்துள்ளார்.

பிரேமலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகை மமிதா பைஜுவுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நுழைந்தார்.

தெலுங்கு திரையுலகில் இருந்தும் மமிதாவுக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி வருகின்றன. இதனால் தென்னிந்திய திரையுலகில் தற்போது டிரெண்டிங் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மமிதா.

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உளளார். இந்த படத்தை சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார். மைத்ரி மூவிஸ் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், கடை திறப்பு விழாவிற்காக சென்னை விஆர் மாலுக்கு, நடிகை மமிதா பைஜு வந்த நிலையில், அவரை அழைத்து வந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் சரியாக பாதுகாப்பு வழங்காத நிலையில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார்.

கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட ரசிகர்கள் கண்ட இடத்தில் கை வைத்தனர். இதனால், மமிதா மிகவும் தர்ம சங்கடமாக உணர்ந்தார். பின் ஒரு வழியாக கூட்டத்தில் இருந்து தப்பித்து பெருமூச்சுவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மலையாள ரசிகர்கள் சென்னை இளைஞர்களை திட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *