அப்பா இறந்து ஒரு வாரமாச்சு.. இன்னைக்கு தான் எனக்கு தெரியும் – ஷெரின் உருக்கம்

அப்பா இறந்து ஒரு வாரமாச்சு.. இன்னைக்கு தான் எனக்கு தெரியும் – ஷெரின் உருக்கம்
  • PublishedJune 6, 2024

நடிகை ஷெரின் தனது தந்தை மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் ஷெரின்.

அந்நிகழ்ச்சிக்கு பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

தற்போது தமிழில் அவர் கைவசம் ரஜினி என்கிற திரைப்படம் உள்ளது.

இந்த நிலையில், “நடிகை ஷெரின் தன் தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், “நான் உன்னை மிகவும் நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உனது அன்பிற்காக ஏங்கினேன். ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் இறந்துவிட்டீர்கள், ஆனால் இன்றுதான் எனக்கு தகவல் கிடைத்தது, அதைக்கேட்டு நான் மனமுடைந்து போனேன். உங்களது இந்தப் படம் தான் என்னிடம் உள்ளது, இது என்னிடம் எப்போதும் இருக்கும். மிஸ் யூ” என பதிவிட்டுள்ளார்.

தந்தை பிரிந்து சென்றதால் நடிகை ஷெரின் தன் தாயுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *