கங்கனா ராணாவத் கன்னத்தில் பளார் விட்ட பாதுகாப்பு படை பெண் காவலர்

கங்கனா ராணாவத் கன்னத்தில் பளார் விட்ட பாதுகாப்பு படை பெண் காவலர்
  • PublishedJune 6, 2024

சண்டீகர் விமான நிலையத்தில் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் கங்கனா ரனாவத். இவர் 5,37,022 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 4,62,267 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

கங்கனா இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். சண்டிகர் விமான நிலையத்திற்கு கங்கனா ரனாவத் வந்தார். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரியுடன் ஏதோ வாக்குவாதம் நடந்தது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக அந்த பெண் பாதுகாப்பு அதிகாரி கங்கனா கன்னத்தில் அறைந்தார். இது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *