அஜித் பற்றி விஜய் அம்மா கூறிய அந்த செய்தி… மீண்டும் வைரலாகும் வீடியோ

அஜித் பற்றி விஜய் அம்மா கூறிய அந்த செய்தி… மீண்டும் வைரலாகும் வீடியோ
  • PublishedJune 9, 2024

விஜய்யும், அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தனர். அதன் பிறகு இரண்டு பேருமே சேர்ந்து நடிக்கவில்லை.

இந்த நிலையில் அஜித் குறித்து விஜய்யின் தாய் ஷோபா பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினி – கமல் என்பது போல் அஜித் – விஜய் என உருவாகி விட்டது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது.

கடைசியாக விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வெளியானது. இதில் துணிவு படம் வெற்றி பெற்றதாகவே பலரும் கூறினார்கள்.

இரண்டு பேருக்கும் போட்டி என்ற நிலைதான் இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளுக்குள் ஆசை இருப்பதாகவே தெரிகிறது. அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்தை பார்த்துவிட்டுக்கூட வெங்கட் பிரபுவிடம் பேசிய விஜய் என்னிடம் சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரை நானே நடித்திருப்பேன் என சொல்லியிருக்கிறார். இதனை வெங்கட் பிரபுவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில் அஜித் குறித்து விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர்,

“குஷி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அஜித் வந்திருந்தார். அப்போது பேசிய அவர், விஜய்யும் நானும் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது விஜய்யின் வீட்டிலிருந்து எனக்கும் சேர்த்து உணவு வரும். ஷோபா அம்மாவின் கையால் நான் சாப்பிட்டிருக்கிறேன். அதை என்னால் மறக்கவே முடியாது என கூறினார். அவர் அப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்றார் ஷோபா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *