சஞ்சைக்கு வந்த சோதனை! ட்ராப் ஆகியதா முதல் படம்?

சஞ்சைக்கு வந்த சோதனை! ட்ராப் ஆகியதா முதல் படம்?
  • PublishedJune 21, 2024

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி அதற்கு படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை; எந்த மூவ்மெண்ட்டும் இல்லை.

இதனால் அந்தப் படம் என்ன ஆனது என்பது குறித்து ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது. சூழல் இப்படி இருக்க ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்குவது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இருப்பது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்கு வந்திருப்பதுதான்.

ஆனால் தனது தந்தை போல் நடிகராக இல்லாமல் தாத்தா போல் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்திருக்கும் ஜேசன் ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி லைகா நிறுவனத்தில் இப்போது சில பிரச்னைகள் ஓடிக்கொண்டிருப்பதாகவும்; அதன் காரணமாக ஜேசனின் படத்தை தயாரிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் படம் ட்ராப் ஆகிவிட்டதோ என்று கவலையில் இருந்த ஜேசனுக்கு விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் கை கொடுத்திருக்கிறாராம். அதாவது இந்தப் படத்தை ஜெகதீஷே தயாரிக்கவிருப்பதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *