உலகப்புகழ் பெற்ற இலங்கை அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் மரணம்?? இணையத்தில் பரவும் வதந்தி

உலகப்புகழ் பெற்ற இலங்கை அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் மரணம்?? இணையத்தில் பரவும் வதந்தி
  • PublishedJune 24, 2024

இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து அதன் பின் சன் தொலைக்காட்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீத்,உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக வதந்தி ஒன்று இணையத்தில் பரவி கொண்டிருக்கின்றது.

அவரது தரப்பு இது வதந்தி என்றும், அவர் இலங்கையில் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும். இணையத்தில் பரவும் செய்தி வதந்தி என்றும் தெரிவித்துள்ளது.

இவரை பற்றி பல்வேறு வதந்திகளும் அடிக்கடி பரவி வந்தது. அவர் விபத்தில் இறந்து விட்டார் என்றும், உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார் என்றும் மூன்று முறை அவர் காலமானதாக செய்திகள் பரவி இருந்தது. தற்போதும் அதே போல ஒரு செய்தியை விஷமிகள் பரப்பி உள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் நலமாக உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்கள் உறுதிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *