“எவன்டி ஒன்ன பெத்தான்” நடிகையின் பார்வை பறிபோனது… நடந்தது என்ன?

“எவன்டி ஒன்ன பெத்தான்” நடிகையின் பார்வை பறிபோனது… நடந்தது என்ன?
  • PublishedJuly 21, 2024

ராஜஸ்தானில் பிறந்து, ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் தான் பிரபல நடிகை ஜாஸ்மின் பாசின் அவருக்கு வயது 34. இவர் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் இசை ஆல்பங்களில் நடித்து வருகின்றார்.

பல இசை ஆல்பங்களிலும், சின்னத்திரை நாடகங்களிலும் பிஸியாக நடித்து வரும் ஜாஸ்மின், தனது கலைப்பயணத்தை தொடங்கியது கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வானம்” என்கின்ற திரைப்படத்தில் தான்.

“ராஜ் பார்ட்டிக்கு பாஸ் வாங்கிட்டியா?” என்று சிம்புவை அன்போடு அழைத்த அந்த பணக்கார “பிரியா”தான் நடிகை ஜாஸ்மின்.

இறுதியாக தமிழில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான “ஜில் ஜங் ஜக்” என்கின்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அதற்காக பிரத்தியேகமாக ஒரு “காண்டாக்ட் லென்ஸை” அவர் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதனால் அவருடைய கண்கள் பாதிப்படைந்து, தற்போது தனக்கு பார்வை (தற்காலிகமாக) பறிபோகியுள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவருடைய கருவிழிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 4 முதல் 5 நாள்களில் அவர் குணமாகிவிடுவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார் ஜாஸ்மின் பாசின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *