நடந்து முடிந்தது நாக சைதன்யா நிச்சயதார்த்தம்! மணப்பெண் இவங்கதான்…

நடந்து முடிந்தது நாக சைதன்யா நிச்சயதார்த்தம்! மணப்பெண் இவங்கதான்…
  • PublishedAugust 8, 2024

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றதாக நாகார்ஜுனா சோஷியல் மீடியாவில் தெரிவித்து, நிச்சயதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இன்று காலை 9.42 மணிக்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், இரு வீட்டார் சந்திப்பு மட்டும் தான் என்றும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை என்றும் தகவல்கள் வெளியான நிலையில், ஆகஸ்ட் 8ம் தேதி 2024ம் ஆண்டு நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

சமந்தாவுடன் வாழ்க்கை நடத்தி வந்த போதே சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் சென்று வந்தார் என சர்ச்சைகள் வெடித்தன. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில், சில போட்டோ ஆதாரங்களுடன் சோஷியல் மீடியாவில் பல விஷயங்கள் பூகம்பங்களாக கிளம்பின. இந்நிலையில், இருவரும் இதுவரை காத்து வைத்திருந்த ரகசியம் தற்போது அம்பலமாகி விட்டது.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *