“மகாராஜா”வின் “மாகாராணி”யாக நயன்தாரா… புரியலையா?

“மகாராஜா”வின் “மாகாராணி”யாக நயன்தாரா… புரியலையா?
  • PublishedSeptember 10, 2024

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’ வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்றது.

ரஜினிகாந்த், விஜய் என பல முன்னணி நடிகர்கள் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து வாழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நித்திலன் சாமிநாதனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாரா நடிப்பில் “மகாராணி” என்ற படத்தை இயக்கவுள்ளார் நித்திலன்.

“மகாராஜா” படத்தின் ரிலீசுக்கு முன்பே நயன்தாரா நடிக்கவுள்ள படத்தை இயக்க நித்திலன் ஒப்பந்தமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் “மகாராஜா” படத்தை தயாரித்த ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் நயன்தாரா நடிக்கவுள்ள “மகாராணி” படத்தையும் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பலரும் “மகாராணி” என்று படத்தின் டைட்டில் வைக்க “மகாராஜா” படத்தின் வெற்றிதான் காரணமா என்றும் கேட்டு வருகின்றனர். நயன்தாராவின் “மகாராணி” படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *