நயன்தாராவுக்கு நடந்த விபரீதம்… பதறியடித்து சமூக வலைதளத்தில் பதிவு

நயன்தாராவுக்கு நடந்த விபரீதம்… பதறியடித்து சமூக வலைதளத்தில் பதிவு
  • PublishedSeptember 14, 2024

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கலக்கி வந்த இவர் ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தி மொழியில் மாஸ் என்ட்ரி கொடுத்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

தனது டயட், தனது பிசினஸ் தொடர்பான விஷயங்கள், தனது குடும்பத்துடன் செலவிடும் அழகிய தருணங்கள், படங்கள் குறித்த அப்டேட் போன்றவற்றை பதிவிட்டு சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகிறார் . மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ் கொண்டுள்ள நயன்தாராவின் சமூக வலைத்தளப் பக்கம் தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ் கொண்டுள்ள நயன்தாராவின் சமூக வலைத்தளப் பக்கம் தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நயன்தாரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் பதிவில், ‘எனது எக்ஸ் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது, தேவையில்லாத விசித்திரமான பதிவுகள் ஏதேனும் எனது அக்கவுண்டில் போஸ்ட் செய்யப்பட்டால் அதை தவிர்த்து விடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *