ட்ரெண்டிங்கில் மணிமேகலை… வெளிநாட்டுக்கு பறந்த பிரியங்கா

ட்ரெண்டிங்கில் மணிமேகலை… வெளிநாட்டுக்கு பறந்த பிரியங்கா
  • PublishedSeptember 15, 2024

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் ஆங்கர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டிலிருந்து துவங்கி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், நிகழ்ச்சியின் துவக்கம் முதலே கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவந்தார் மணிமேகலை.

கடந்த 4 சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்தார் மணிமேகலை. இந்நிலையில் இந்த சீசனில் அவர் நிகழ்ச்சியின் ஆங்கராக களமிறங்கியுள்ளார்.

தர்ஷனுடன் இணைந்து மணிமேகலை இந்த நிகழ்ச்சியின் ஆங்கராக செயல்பட்டு வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் குக்காக இருக்கும் மற்றொரு ஆங்கரால் தனக்கு மிகப்பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காசு, புகழ் உள்ளிட்ட அனைத்தையும் விட சுயமரியாதை முக்கியம் என்றும் தெரிவித்துள்ள மணிமேகலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அவரது இந்த முடிவு ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குக்காக மட்டுமில்லாமல் தன்னுடைய ஆங்கரிங்கில் அதிகமான தலையீடு உள்ளதாகவும் மணிமேகலை தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் சுற்றுலா கொண்டாட்டத்திற்காக தற்போது பிரியங்கா வெளிநாடு பறந்துள்ளார். விமானத்தில் இருக்கும்படியான புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு, வெளிநாட்டுக்கு போயிருக்காங்களே என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்த விஷயத்தில் மணிமேகலைக்கு ஆதரவு பெருகி வருகிறது. தொடர்ந்து அவர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *