சிவகார்த்திகேயனிடம் சதீஷ் கேள்வி கேட்ட காட்சி GOAT படத்தில் நீக்கம்

சிவகார்த்திகேயனிடம் சதீஷ் கேள்வி கேட்ட காட்சி GOAT படத்தில் நீக்கம்
  • PublishedSeptember 30, 2024

நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் கேமியோ கேரக்டர்களிலும் அளவுக்கதிகமான நடிகர்களை இணைத்திருந்தார் வெங்கட் பிரபு.

இவர்கள் மட்டுமில்லாமல் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட லீட் நடிகர்களும் இந்தப் படத்தில் கேமியோ கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

திரிஷா விஜய்யுடன் இணைந்து மட்ட பாடலுக்கு சூப்பரான குத்தாட்டம் போட்டிருந்தார். இதேபோல நடிகர் சிவகார்த்திகேயன் கிளைமாக்சில் வில்லனை பார்த்துக் கொள்வதாகவும் அவரிடம் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை நடிகர் விஜய் தருவதாகவும் காட்சி அமைந்திருந்தது.

இதையடுத்து கோலிவுட்டில் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனுக்கு நடிகர் விஜய் கொடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தக் காட்சி குறித்து தற்போது நடிகர் சதீஷ் பேசியுள்ளார்.

நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சட்டம் என் கையில் படத்தின்பிரமோஷனுக்காக பேசிய சதீஷ், கோட் க்ளைமாக்ஸ் காட்சி குறித்தும் பேசியுள்ளார்.

கிளைமாக்சில் சிவகார்த்திகேயன் கிட்ட துப்பாக்கியை கொடுத்துட்டு விஜய் போனதுக்கு அப்புறம் அந்த இடத்திற்கு வரும் தான், சிவகார்த்திகேயனிடம், அப்ப நான் அவரிடத்தை பார்த்துக்கட்டா என்று கேட்பதாக காட்சி அமைந்திருந்ததாகவும் ஆனால் அந்தக் காட்சியை எடிட்டிங்கில் தூக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சதீஷின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், இன்னும் இதுபோன்ற எத்தனை காட்சிகளை நடிகர்களை வெங்கட் பிரபு கோட் படத்தில் இணைத்திருந்தார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *