கர்ப்பமான சமந்தா.. தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய குடும்பம்…

கர்ப்பமான சமந்தா.. தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய குடும்பம்…
  • PublishedOctober 16, 2024

நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். அதற்கு பிறகு சைதன்யாவும், சமந்தாவும் தங்களது கரியரில் கவனம் செலுத்திவருகிறார்கள்.

நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். விரைவில் அவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது.

இவர்களின் திருமணம் விரைவில் ராஜஸ்தானில் நடக்கும் என்று கூறப்படுகிறது. சோபிதா துலிபாலாவை பொறுத்தவரை அவரது பூர்வீகமும் ஆந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது குடும்பம் அடிப்படையில் ஓரளவு வசதியான குடும்பம்தான். சோபிதாவுக்கு சமந்தா என்ற தங்கை இருக்கிறார். அவர் சாஹில் குப்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இரண்டு பேரும் மருத்துவர்களாக டெல்லியில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் சமந்தா கர்ப்பமாகியிருக்கிறார்.

அதனையொட்டி அவருக்கான வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலும் சோபிதா தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரவிருக்கு சூழலில் அவரது தங்கைக்கு நடந்த வளைகாப்புதான் முதல் நல்ல விஷயம் என்ற சென்ட்டிமென்ட்டால் நாகார்ஜுனா குடும்பம் பயங்கர ஹேப்பியோடு கலந்துகொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *