வடிவேலு தொடர்ந்த மானநஷ்ட வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வடிவேலு தொடர்ந்த மானநஷ்ட வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • PublishedMarch 6, 2025

நடிகர் சிங்கமுத்து Youtube சேனல்களில் அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட கோரியும், தன்னை பற்றி இனி அவதூறாக பேச கூடாது என்பதற்காக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணனையை மாஸ்டர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றம் மாற்றியது.

இந்திய நிலையில் சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகி, சாட்சியங்களை சமர்ப்பித்தார்.

இதைத்தொடர்ந்து சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர், வடிவேலுடன் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதற்காக வழக்கம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால், இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதகவும், குறுக்கு விசாரணை தொடர்பாக அங்கே முறையிட்டு கொள்ளலாம் என கூறி வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *