திருமணத்திற்கு பின் சோபிதா கமிட்டாகியுள்ள முதல் தமிழ்

திருமணத்திற்கு பின் சோபிதா கமிட்டாகியுள்ள முதல் தமிழ்
  • PublishedApril 5, 2025

படம் கடந்த ஆண்டு நடிகை சோபிதா தனது காதலர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் நடிகை சோபிதா சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் வேட்டுவம். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு பின் பா. ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக சோபிதா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பின் சோபிதா கமிட்டாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும்.

திருமணத்திற்கு முன் மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2ல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *