கணவர் குறித்து உண்மையை வெளியிட்ட கீர்த்தி…என்ன தெரியுமா?

கணவர் குறித்து உண்மையை வெளியிட்ட கீர்த்தி…என்ன தெரியுமா?
  • PublishedJune 12, 2025

கீர்த்தி சுரேஷ், தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியில் களமிறங்கி கலக்கிக் கொண்டிருப்பவர்.

தொடர்ந்து நிறைய படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது நடிகையர் திலகம் என கொண்டாடப்படும் சாவித்திரியின் வாழ்க்கையை கூறும் படமாக அமைந்த மகாநதி படம் தான்.

இந்த படத்தால் சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றார்.பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆண்டனி என்பவரை காதலித்து வர திருமணமும் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் இரண்டு முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, ஆண்டனியிடம் முதலில் நான்தான் காதலை சொன்னேன், எங்களது காதலை சீக்ரெட்டாக வைக்க நிறைய கஷ்டப்பட்டோம்.

நான் நடித்த படங்களில் அவருக்கு மகாநடி, சாணிக்காயிதம், ரகுதாத்தா உள்ளிட்ட படங்கள் பிடிக்கும்.

முக்கியமாக சாணிக்காயிதம் படத்தின் ஜானரை அவர் விரும்பினார், அந்தப் படத்தை பார்த்துவிட்டு எனது பக்கத்தில்கூட பத்து நாட்கள் வரவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *