கடவுள் தான் ஜகத் தேசாயை என்னிடம் அனுப்பினார்…அமலா பால்

கடவுள் தான் ஜகத் தேசாயை என்னிடம் அனுப்பினார்…அமலா பால்
  • PublishedJune 15, 2025

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இதன்பின் தெய்வத்திருமகள், தலைவன், வேலையில்லா பட்டதாரி என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இயக்குநர் விஜய் – நடிகை அமலா பால் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால், சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய பிரிவுக்கு அமலா பால் தொடர்ந்து சினிமாவில் நடித்ததுதான் காரணம் என கூறப்படுகிறது.

இதன்பின் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அமலா பால், கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு இலை என்கிற மகன் உள்ளார். இந்த நிலையில், நடிகை அமலா பால் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், “நான் கடவுளிடம் ‘கடவுளே ஏன் எனக்கு மட்டுமே இப்படி Boy friends அனுப்புற. நான் எவ்வளவு ஸ்வீட் ஆன பெண். நான் அனைவரையும் சர்ப்ரைஸ் செய்கிறேன். இவ்வளவு லவ் பண்றேன். ஆனால், எனக்கு மட்டும் ஏன் இவங்கள அனுப்புற’ என புகார் செய்தேன்.

என்னை சர்ப்ரைஸ் செய்யும், என்னை Date-க்கு அழைத்து செல்லும் Boy Friend வேண்டும் என்று நான் கடவுளிடம் கேட்டேன். அதன் பின்தான் ஜகத் தேசாயை கடவுள் என்னிடம் அனுப்பினார்” என அமலா பால் கூறியுள்ளார்.

இதேவேளை, கர்ப்பமான பிறகுதான் இவர்கள் திருமணம் செய்துகொண்டதையும் அண்மையில் அமலாபால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *