வயிற்றில் குழந்தையை சுமக்க விரும்பவில்லை…சன்னி லீயோன்

வயிற்றில் குழந்தையை சுமக்க விரும்பவில்லை…சன்னி லீயோன்
  • PublishedSeptember 1, 2025

வெளிநாட்டு நடிகையாக ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லீயோன், அதிலிருந்து வெளியேறி பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் ஒருசில படங்களில் நடித்துள்ள சன்னி லியோன், 2011ல் நடிகர் டேனியல் வெபனர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோ 2017ல் நிஷா என்ற இரண்டு வயது மகளை தத்தெடுத்தனர்.

அதன்பின் 2018ல் வாடகை தாய் மூலம் நோவா மற்றும் ஆசர் என்ற இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான சன்னி லியோன், குழந்தை பெற்றது குறித்து மனம் திறந்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில், நான் நீண்ட காலமாக குழந்தைகளை தத்தெடுப்பது பற்றி யோசித்து வந்தேன். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை எங்களுக்கு கைக்கொடுக்கவில்லை. அதனால் குழந்தை தத்தெடுப்புக்கு விண்ணப்பித்தோம். இதை தொடர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தோம்.

நான் கர்ப்பமாகி என் வயிற்றில் குழந்தையை சுமக்க விரும்பவில்லை. அதனால் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்ற முடிவு எடுத்தோம். அதற்காக நிறைய பணம் செலவு பண்ணோம். அவங்களுக்கு வாரா வாரம் காசு கொடுத்தோம். அந்த வாடகை தாய் சொந்த வீடு வாங்கிட்டாங்க என்று சன்னி லியோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *