“உசுப்பேத்துறவுங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவுங்க கிட்ட கம்முனு இருக்கனும்” : விஜய்கு பொருந்திய அவரது வரிகள்!

“உசுப்பேத்துறவுங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவுங்க கிட்ட கம்முனு இருக்கனும்”  : விஜய்கு பொருந்திய அவரது வரிகள்!
  • PublishedJune 26, 2023

லியோ படத்தின் நா ரெடி பாடல் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. அதாவது இந்த பாடலில் விஜய் வாயில் சிகெரெட்டை வைத்திருப்பார். இது எதிர்கால இளஞர்களை அந்த பழக்கத்திற்கு தூண்டும் என பலர் விமர்சித்து வருகிறார்கள்.

இதற்கிடையே  இதெல்லாம் ஒரு பொறுக்கி தனமான பாடல்,  பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா? இதெல்லாம் அசிங்க பிடிச்ச வேலை என்று இவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் இப்பாடல் போதை பொருள் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மீது ஆன்லைன் மூலம் புகார் கொடுத்து வருகிறார்கள்.

அந்தப் புகாரில் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும் பேரும் புகழும் அதிகரிக்கும் பொழுது தன்னடக்கமும் அதிகம் தேவை என்றும்,  அதற்கு ஏற்ற மாதிரி தன்னை வளர்த்துக் கொள்ள தெரிய வேண்டும் என்றும் இவரை விலாசி வருகிறார்கள்.

அத்துடன் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இளைஞர்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் சீண்டி பார்த்து அவர்களை உசுப்பேத்த வேண்டாம் என்று பலரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *