”இனியும் இவர நம்பினா முதலுக்கு மோசம் போயிடும் போலேயே” : நயன்தாராவின் அடுத்த மூவ்!

”இனியும் இவர நம்பினா முதலுக்கு மோசம் போயிடும் போலேயே”  : நயன்தாராவின் அடுத்த மூவ்!
  • PublishedJune 27, 2023

லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாராவின் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் இப்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார்.

இதற்கிடையே நயன்தாரா கடுமையைாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளாராம். காரணம் அண்மைக்காலமாக அவருடைய படங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இரண்டாவது அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கு ஏகேவின் படம் கைநழுவி சென்றது.

இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுக்க முற்பட்டார். அதுவும் பேச்சளவிலேயே இருக்கிறது. அடுத்த கட்டம் என்னவென்றே தெரியாத நிலைதான் தற்போது இருக்கிறது.

இந்நிலையில், நயன்தாரா தற்பொழுது கேரளாவில் 10 அடுக்கு கொண்ட அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் 160 வீடுகளை கட்ட முடிவெடுத்துள்ளார்.

இதற்கான பணத்தை சேர்த்து வைத்த பணத்திலிருந்து எடுக்க வேண்டாம் இனிமேல் எல்லா படங்களில் நடித்து அந்த பணத்தில் இதை கட்டி முடிக்கலாம் என நயன்தாரா முடிவெடுத்துள்ளார். இதனால் வரும் வாய்புகளில் எல்லாம் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளாராம்.

விக்னேஷ் சிவன் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதாகவும் சில கேலி கிண்டல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்காகவே அம்மணி இனியும் இவரை நம்பினால் பிரயோஜனம் இல்லை என்று எண்ணி களத்தில் இறங்கிவிட்டார் போலும். எது எப்படியோ இனி அடுத்தடுத்து நயன்தாரா படம் ரிலீஸாகும் என்பதால் அவருடைய ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *