முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியும் பிரயோஜனம் இல்லை – 10 வருடங்களாக தொடரும் கர்மா!

முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியும் பிரயோஜனம் இல்லை – 10 வருடங்களாக தொடரும் கர்மா!
  • PublishedJuly 7, 2023

வளர்ந்து வரும் இயக்குனர்களை பொறுத்த வரைக்கும் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது என்பது இவர்களுக்கு மிகப்பெரிய கனவாகவே இருக்கும்.

ஆனால் இந்த இயக்குனர் அடுத்தடுத்து அஜித் மற்றும் விஜய் என உச்ச நட்சத்திரங்களை வைத்து வெற்றி படம் கொடுத்துவிட்டு தற்போது வேறு ஒரு வெற்றி படத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

முதல் படத்திலேயே நடிகர் அஜித்குமாரை இயக்கிய ஏ எல் விஜய் தான் அந்த இயக்குனர்.  புகழ்பெற்ற தயாரிப்பாளர் அழகப்பனின் மூத்த மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

Director AL Vijay to tie the knot again | Entertainment News,The Indian  Express

இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத படம் என்றால் அது மதராசபட்டினம் தான். ஆர்யா மற்றும் எமி ஜாக்சனை வைத்து இவர் இயக்கிய இந்த படம் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிவிட்டது.

ஒரு வெற்றி படம் கொடுத்த இயக்குனர்களை சட்டென காணாமல் போய்விடும் சினிமா உலகில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்து கொண்டே இருந்தார் விஜய்.

அத்துடன் இவருடைய இயக்கத்தில் உருவான தலைவா திரைப்படம் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்தாலும்  சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்துவிட்டது. இப்படி தொடர் ஹிட்டுகளை கொடுத்து வந்த ஏ.எல் விஜய் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்னும் படத்தை இயக்கினார்.

இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. மேலும் இந்த படத்திற்குப் பிறகு விஜய் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை. வெற்றி முகமாக துவங்கிய இவருடைய சினிமா பயணம் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *