என்னுடைய இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் இறந்து போயிருப்பார்கள் – பாவனா!

என்னுடைய இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் இறந்து போயிருப்பார்கள் – பாவனா!
  • PublishedJuly 9, 2023

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்களை பெற்ற நடிகை ஒருவர்,  ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையே பதறிப் போக செய்தது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். தெத்துப் பல்லழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்து விட்டார்.

5 times actor Bhavana took unwavering stands and made statements that  rippled through Malayalam film industry | Entertainment News,The Indian  Express

அதை தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருந்த வேளையில் இவருக்கு நடந்த ஒரு சம்பவம் பலரையும் பதற வைத்தது. பலவந்ததிற்கு ஆளான இவருக்கு ஆதரவாக மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் பலரும் குரல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைத்தது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஹீரோவின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் பாவனா ஒரு பேட்டியில் கூறிய விஷயம் தான் சபாஷ் போட வைத்திருக்கிறது.

Lesser known facts about 'Ntikkakkakkoru Premandaarnnu' actress Bhavana  Menon | The Times of India

அதாவது அவருக்கு நடந்த சம்பவம் பற்றி மனம் திறந்து பேசிய அவர்  என்னுடைய இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் நிச்சயம் உயிரோடு இருந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு நான் துயரத்தை அனுபவித்தேன். ஆனால் எந்த தப்பும் செய்யாத நான் எதற்கு முடங்கி போய் இருக்க வேண்டும்.

தப்பு செய்தவர்கள் தான் அதை நினைத்து வெட்கப்பட வேண்டும் என்று தைரியமாக கூறினார். அவருடைய இந்த பேச்சு பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே தான் காதலித்த நபரையும் அவர் தைரியமாக கரம் பிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *